மேலும் செய்திகள்
இன்று இனிதாக
08-Dec-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத நான்காவது சோமவார விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், நான்கு தெருவார் தோப்பு, வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் 20வது ஆண்டின், நான்காவது வார சோமவாரமான நேற்று, மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நடன ஆசிரியை பிரபாவதி ஹரிஹரன், மகாலட்சுமி நிருத்யாலயா நடனப்பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை நான்கு தெருவார் செங்குந்தர் சமுதாயம் மற்றும் நான்கு தெருவார் தோப்பு குடியிருப்போர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
08-Dec-2025