உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண் திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

மண் திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, வெங்கடேசபாளையம், ஹைதர்பட்டரை ஜன்டா தெருவில், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடி வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயில் மண் திட்டுகள் மற்றும் குப்பை கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதியினர் வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை என தெரிவிக்கின்றனர். மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் தொற்றுநோய் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்கி, கழிவுநீர் முழுமையக வெளியேறும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் லியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை