சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் ஒருவர் கைது
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் பேரூராட்சியி வசிக்கும், 6 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். நேற்று, தன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகில் வசிக்கும் செல்வராஜ் என்பவர், சிறுமியிடம் விளையாடுவது போல, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். அதையடுத்து, உத்திரமேரூர் பேரூராட்சியைச் சேர்ந்த செல்வராஜ், 54, என்பவரை, போலீசார் நேற்று, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.