உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் மாசி மக விழா கோலாகலம்

திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் மாசி மக விழா கோலாகலம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில், பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில், மகம் நட்சத்திரம், பௌர்ணமி அன்று மாசி மக விழா நடப்பது வழக்கம்.அதன்படி, இந்த ஆண்டிற்கான மாசி மகத்தை ஒட்டி, நேற்று விழா நடந்தது. காலை 11:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அப்பன் வெங்கடேச பெருமானுக்கு திருமஞ்சனம் நடந்தது.அதை தொடர்ந்து, பிற்பகல் 12:00 மணிக்கு கோவிலில் இருந்து சக்கரத்தாழ்வாரை, அப்பகுதி பாலாற்றுக்கு வரவேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஆற்று நீரில் புனித நீராடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை