உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோர மண் அரிப்பால் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையோர மண் அரிப்பால் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், சாலமங்கலம் அடுத்த ஆரம்பாக்கம் சந்திப்பில் இருந்து பிரிந்து ஆரம்பாக்கம், நாவலுார் வழியாக ஆரம்பாக்கம் பிரதான சாலை செல்கிறது.காஞ்சிவாக்கம், நாட்டரசம்பட்டு, சிறுவஞ்சூர், உமையாள்பரணஞ்சேரி, நாவலுார் உள்ளிட்ட கிராமத்தினர், இந்த சாலை வழியே படப்பை, தாம்பரம் பகுதிகளுக்கு, தினமும் கார், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.இச்சாலை வழியே ஏராளமான தனியார் பள்ளி பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் 'பெஞ்சல்' புயலால் பெய்த கனமழையின் போது, பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரால், இந்த சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டது.இதில், தார்ச்சாலை வெள்ள நீரில் சேதமடைந்து, சாலையோரம் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. தற்போது, சாலையோரம் அபாயகரமாக உள்ள பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்,எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் பள்ளி பேருந்துகள், விபத்தில் சிக்கும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆரம்பாக்கம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை