உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று காலை 8:00 மணி வரையில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. குறிப்பாக, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பள்ளூர் - சோகண்டி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது.இந்நிலையில், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்ல வேண்டி இருந்தது. மேலும், நடைபயிற்சி மற்றும் சைக்கிளில் செல்வோர், கடும் பனிமூட்டம் காரணமாக ஒருவித அச்சத்துடனேயே சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை