உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண் அரிப்பால் சாலையோர பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

மண் அரிப்பால் சாலையோர பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வி.என்.பெருமாள் தெருவில், மண் அரிப்பால், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவுடன், வி.என்.பெருமாள் தெரு இணையும் இடத்தில் மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் சென்ற மழைநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, சாலையின் அகலம் வெகுவாக குறைந்து விட்டது. இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவில் திரும்பும்போது, பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். இதேபோல, இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் பாதசாரிகளும் பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், வி.என்.பெருமாள் தெருவில் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், மீண்டும் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ