உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 50 வது வார்டு, ஓரிக்கை கோட்டை காவல் சாலையில் இருந்து தும்பவனம், சதாவரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் சாலையில், மழை நீர் செல்லும் கால்வாயின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கு இருபக்கமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் இல்லாத அப்பகுதியில், இப்பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, தடுமாறி கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, கோட்டை காவல் சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை