உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் நம்மாழ்வார் சாற்றுமறை உத்சவம்

காஞ்சியில் நம்மாழ்வார் சாற்றுமறை உத்சவம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நம்மாழ்வார் சாற்றுமறை உத்சவம் நேற்று நடந்தது. இதில், இரவு 7:00 மணிக்கு பெருமாள் திருவடிகோவில் புறப்பாடு நடந்தது.இரவு 8:00 மணிக்கு பெருமாள் கோவிலில், ஆழ்வார் பிரகாரமாக நம்மாழ்வார் சன்னிதிக்கு எழுந்தருளினார். அங்கு நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது.இரவு 9:30 மணிக்கு பெருமாள், நம்மாழ்வார் சன்னிதியில் இருந்து, திருமலை படியில் எழுந்தருளினார். அங்கு நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது.. அதை தொடர்ந்து நம்மாழ்வார், சன்னிதிக்கும், பெருமாள், கண்ணாடி அறைக்கும் எழுந்தருளினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை