வராகி மீது அடுத்த வழக்கு; காஸ் ஏஜன்சி மோசடி புகார்
சென்னை, : வியாசர்பாடி, முல்லை நகர் கிழக்கு அவென்யு சாலையைச் சேர்ந்தவர் சாரதி, 47; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற யு - டியூபர் வராகி, 50, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.வராகி மத்திய அரசில் தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும், 'காஸ்' ஏஜன்சி உரிமம் வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறிஉள்ளார். இதை நம்பி வழக்கறிஞர் சாரதி, கடந்த 2023 பிப்., மாதம் 5 லட்ச ரூபாய் வராகிக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில், பணம் கொடுத்து ஒன்றரை ஆண்டு களாகியும், வராகி 'காஸ்' ஏஜன்சி உரிமம் வாங்கி தராததோடு, 5 லட்ச ரூபாயையும் தராமல் ஏமாற்றிஉள்ளார்.சாரதி பணத்தை திருப்பி கேட்ட போது, வாராஹி தன் கூட்டாளிகள் மூவருடன் சேர்ந்து, சாரதியை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர். கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் வைத்திலிங்கம் என்பவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், வராகி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது.