உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏகாம்பரர் கோவிலில் பங்குனி திருவிழா பந்தல், வாழைமரம் கட்டாததால் போராட்டம்

ஏகாம்பரர் கோவிலில் பங்குனி திருவிழா பந்தல், வாழைமரம் கட்டாததால் போராட்டம்

ஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 17 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி துவங்கி இருப்பதால், நடப்பாண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா குறித்து கோவில் நிர்வாகம் சார்பில், முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.நேற்று முன்தினம் கொடியேற்றம் இன்றி, சுவாமி வெளிபுறப்பாடு இன்றி, பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா துவங்கியது. இதில், கோவில் மண்டபத்தில், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மலர் அலங்காரம் மட்டும் நடக்கிறது.இந்நிலையில், பங்குனி உத்திர விழாவுக்கு கோவிலில் வாழை மரம், பந்தல் போன்றவை கூட கட்டவில்லை எனக் கூறி, 20க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, கோவிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, கோவில் அதிகாரிகள், போராட்டம் நடத்தியவர்களிடம் நேற்று பேச்சு நடத்தினர். தொடர்ந்து, பந்தல், வாழை மரம் ஆகியவற்றை அமைத்துள்ளனர். சுவாமிக்கு பாரம்பரிய நகைகளை அணிவிக்கவும், உட்புறப்பாடு நடக்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி