உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சியில் விஜய் நிகழ்ச்சி அனுமதி கேட்டு மனு

 காஞ்சியில் விஜய் நிகழ்ச்சி அனுமதி கேட்டு மனு

ஸ்ரீபெரும்புதுார்: காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக, நிர்வாகிகளின் குடும்பத்தினரை சந்திக்க, நாளை விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட த.வெ.க., சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட த.வெ.க., நிர்வாகிகளின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் திட்ட மிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட மூன்று சட்டசபை தொகுதிக்குட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, ஊராட்சி உள்ளிட்ட நிர்வாகிகளின் குடும்பத்தை சேர்ந்த 2,000 பேரை விஜய் சந்திக்க உள்ளார். அதற்காக, ஸ்ரீபெரும்புதுார் அருகே, குன்னத்தில் உள்ள ஜேப்பியார் கல்லுாரிக்கு த.வெ.க., தலைவர் விஜய் நாளை வர உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, காஞ்சிபுரம் எஸ்.பி., அலுவலகம் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்ட த.வெ.க., சார்பில், நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை நடைப்பெற்று வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்