உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செவிலிமேடு பாலாறு பாலத்தில் இடையூறு மணல் குவியல் அகற்றம்

செவிலிமேடு பாலாறு பாலத்தில் இடையூறு மணல் குவியல் அகற்றம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடிக்கும், - புஞ்சையரசந்தாங்கல் கிராமத்திற்கும் இடையே பாலாற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாக அய்யங்கார்குளம், பெருநகர், மானாம்பதி, வந்தவாசி, செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து நிறைந்த இப்பாலத்தின் வழியாக, கட்டுமானப் பணிக்காக எம்.சாண்ட் மணல் லாரிகளில் இருந்து சிதறிய மணல், இப்பாலத்தின் சாலையோரம் குவியலாக இருந்தது.இதனால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மணல் குவியலில் சிக்கி விபத்தில் சிக்கினர். எனவே, செவிலிமேடு பாலாறு மேம்பால சாலையோரம் குவிந்துள்ள எம்.சாண்ட் மணலை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நெடுஞ்சாலைத் துறை சார்பில், செவிலிமேடு பாலாறு பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் இருந்த மணல் குவியல் நேற்று அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை