உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போதை ஒழிப்பு குறித்து கல்லுாரியில் கருத்தரங்கம்

போதை ஒழிப்பு குறித்து கல்லுாரியில் கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கல்லுாரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதை ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த கருத்தரங்கம் நடந்து. காஞ்சிபுரம் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர் வெங்கடேசன், போதை மாத்திரையால் உண்டாகும் உடல் பாதிப்பு, சமூக சிக்கல் குறித்தும், சிக்கல் வரும் போது பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் கருத்துகளைப் பகிர்ந்தால் தற்கொலை எண்ணம் தவிர்க்கலாம் என விளக்கினார். கல்லுாரி முதல்வர் திருமாமகள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !