சேதமடைந்த சாலையால் கடும் அவதி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள தாமல்வார் தெரு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், தாமல்வார் தெருவுடன், அப்பாராவ் தெரு சந்திப்பில் சாலை சேதமடைந்துள்ளது.இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.