உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில், வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சன்னிதி தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் வழிந்தோடுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை