மேலும் செய்திகள்
குதிரை வாகனத்தில் மணவாள பெருமாள்
28-Sep-2025
காஞ்சிபுரம்:புரட்டாசி மாத மூன்றாவது வார சனி கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள், வைகுண்ட பெருமாள், உலகளந்த பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், யதோக்தகாரி பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத மூன்றாவது சனிகிழமையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காஞ்சிபுரம் செவிலிமேடு சாலை கிணறு, ராமானுஜர் சன்னிதியில், ராமானுஜர், நேற்று வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம்- - வந்தவாசி சாலை, கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று காலை திருமஞ்சனம், பிரபந்த சேவை நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மூலவர் பேசும்பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
28-Sep-2025