உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கல்லுாரி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க மாணவர்கள் வலியுறுத்தல்

கல்லுாரி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க மாணவர்கள் வலியுறுத்தல்

உத்திரமேரூர்: -உத்திரமேரூரில், அரசு கல்லுாரியில் பராமரிப்பின்றி கிடக்கும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க, மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூரில், டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1,200 மாணவ - - மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள, மாணவ - மாணவியரின் விளையாட்டு திறனை மேம் படுத்த, கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில், விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது. அதில், மாணவ - மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெளியூர்களுக்கு செல்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. தற்போது, விளையாட்டு மைதானம் முறையாக பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் மாணவ - மாணவியர் தவிக்கின்றனர். மேலும், கல்லுாரி அளவிலும், மாவட்ட அளவிலும் போட்டிகளை நடத்த முடியாத சூழலும் உள்ளது. எனவே, உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க, உயர்கல்வித் துறையினர் நடவடிக்கை எடுக்க, மாணவ - மாணவியர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி