உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குண்டும் குழியுமான சாலை பேரிஞ்சம்பாக்கத்தில் அவலம்

குண்டும் குழியுமான சாலை பேரிஞ்சம்பாக்கத்தில் அவலம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் பேரிஞ்சம்பாக்கம் கிராமம் உள்ளது. இப்பகுதியினர் தங்களின் அன்றாட தேவை, வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக பேரிஞ்சம்பாக்கம் பிரதான சாலையை பயன்படுத்தி, படப்பை, ஒரகடம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். தவிர, வளத்தாஞ்சேரி, கண்ணந்தாங்கல், குண்டுபெரும்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பிரதான சாலையில், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பல்லாங்குழியான சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள், இந்த சாலையில் எட்டு போட்டு சென்று வருகின்றனர்.மேலும், இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் செல்லும் போது, குண்டும் குழியுமான சாலையில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ