உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லாரி மீது டூ - வீலர் மோதி வாலிபர் பலி

லாரி மீது டூ - வீலர் மோதி வாலிபர் பலி

மதுராந்தகம் : சென்னை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 38; தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று தன் 'பேஷன் புரோ' இருசக்கர வாகனத்தில், திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றார்.மதுராந்தகம் அடுத்த ஊனமலை அருகே சென்றபோது, முன்னே சென்ற லாரி திடீரென வலது புறம் திரும்பியதால், லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.இதில், ராஜேஷ் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி