| ADDED : நவ 21, 2025 01:29 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, இரு வேறு விபத்துகளில் சிக்கி, இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் அஜய், 19. கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், கீழம்பியில் இருந்து பாலுச்செட்டிச்சத்திரம் நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அதே திசையில் சென்ற கன்டெய்னர் லாரி பின்பக்கம் மோதியதில், அஜய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல, நேற்று முன்தினம், இரவு 10:45 மணியளவில், குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், 21. என்பவர், தன் வீட்டிலிருந்த வெள்ளைகேட் நோக்கி, 'ஹீரோ ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அதே திசையில் வந்த, 'நிஸ்ஸான்' கார், மோதிக் கொண்டது. இதில் தனுஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.