உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமான நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமான நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்

களக்காட்டூர்:உத்திரமேரூர் குருவிமலை கிராமத்தில், சேதமான நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், களக்காட்டூர் ஊராட்சி,- குருவிமலை கிராமம் உள்ளது. இங்குள்ள சாலையோரம், சிமென்ட் கல் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக கட்டுமான பணிக்கு எம்.சாண்ட் மணல், ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களால், நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் கற்கள் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் மழைநீர் தேங்குவதால், இரவு நேரத்தில், செல்லும் பாதசாரிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த சிமென்ட் கல் நடைபாதையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி