மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
10-Jan-2025
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமாக விளங்கும் இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு, பகல்பத்து உற்சவம் டிச., 31ல்துவங்கியது. அதன்படி, வைகுண்ட ஏகாதசி நாளான இன்று, அதிகாலை 3:00 மணிக்கு விஸ்வரூபம் நடைபெறும். காலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, மதியம் 3:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு திருவீதி புறப்பாடு, இரவு 7:00 மணிக்குதிருவாராதனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்நடக்கும். தொடர்ந்து, அடுத்த 10 நாட்களுக்கு ராபத்து உற்சவம் நடைபெறும்.
10-Jan-2025