உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விவேகானந்தர் பொன்மொழிகள் புத்தகம் விநியோகம்

விவேகானந்தர் பொன்மொழிகள் புத்தகம் விநியோகம்

உத்திரமேரூர்,:சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக, நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சுவாமி விவேகானந்தர் சேவாலயா சோசியல் டெவலப்மெண்ட் டிரஸ்ட் சார்பில், தேசிய இளைஞர் தின விழா, டிரஸ்ட் நிர்வாகி கார்த்திக் தலைமையில், திருப்புலிவனத்தில் நேற்று நடந்தது.இதில், சுவாமி விவேகானந்தர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அங்குள்ள, பொதுமக்களுக்கு விவேகானந்தரின் பொன்மொழிகள் குறித்த, புத்தகங்களை சிறுவர்கள் வழங்கினர். மேலும், அவரின் பொன்மொழிகளை கூறி, உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி