உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த பேரணக்காவூர் சாலையில் சிறு மழைக்கே தேங்கிய தண்ணீர்

சேதமடைந்த பேரணக்காவூர் சாலையில் சிறு மழைக்கே தேங்கிய தண்ணீர்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பேரணக்காவூர் கிராமத்தில் இருந்து, சாலவாக்கம் மற்றும் வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சாலை உள்ளது.இச்சாலையை பயன்படுத்தி அப்பகுதியினர், அருங்குன்றம்- - சாலவாக்கம் இணைப்புச் சாலை பகுதிக்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.இந்நிலையில், இந்த சாலை பகுதி சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராவதோடு, மழை நேரங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.அவசர நேரங்களில் இச்சாலையை உடனடியாக கடக்க முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது.எனவே, பழுதடைந்த இச்சாலையை சீர் செய்து தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை