மேலும் செய்திகள்
தொடர் மழையால் மஞ்சள் வரத்து சரிவு
13-Aug-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாயில் மிதந்த பெண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர். காஞ்சிபுரம் ரயில்வே ரோடு அருகே செல்லும் மஞ்சள் நீர் கால்வாயில், பெண் சடலம் மிதப்பதாக, விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கால்வாயில் மிதந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை மீட்டனர். இறந்த பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து, விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Aug-2025