மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற மூவர் கைது
14-Apr-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி, மருத்துவன்பாடி, ஆனைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் உத்திரமேரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மல்லிகாபுரம் சுடுகாடு அருகே கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அர்ஜுன், 21 ; என்பவர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அர்ஜுனை கைது செய்தனர்.
14-Apr-2025