உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு

பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே சர்.சி.பி., நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியை அம்பிகா நேற்று காலை தன் அறைக்கு சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.பீரோவிலிருந்த நான்கு லேப் - டாப் கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டிருந்தன. வகுப்பறையில் இருந்த புரொஜெக்டர், இரண்டு ஸ்பீக்கர்களும் திருட்டு போயிருந்தன. புகாரின்படி, பூதப்பாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ