உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிநுாற்றாண்டு விழா ஆலோசனை

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிநுாற்றாண்டு விழா ஆலோசனை

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிநுாற்றாண்டு விழா ஆலோசனைகரூர்,: கரூர், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நுாற்றாண்டு விழா நடத்த ஆலோசனை கூட்டம் நடந்தது.முன்னாள் மாணவர் சிவராமன் தலைமை வகித்தார். தமிழகத்​தில், 2,238 அரசு பள்ளிகள், 100 ஆண்டு​களை கடந்துள்ளன. அதில், மாவட்​டத்​துக்கு ஒரு பள்ளி வீதம், 37 அரசு பள்ளி​களி​லும் நுாற்​றாண்டு திரு​விழா கொண்​டாடப்பட உள்ளது. அதன்​பின், 100 ஆண்டு​களை கடந்த இதர பள்ளி​களி​லும் நுாற்​றாண்டு நிகழ்வை ஆண்டு விழாவுடன் சேர்த்து கொண்டாட வேண்​டும். பள்ளிகளில் பெற்​றோர் மற்றும் முன்​னாள் மாணவர்கள் வாயிலாக நுாற்​றாண்டு விழா நடத்தப்படும். விழாக் குழு வாயிலாக முன்​னாள் ஆசிரியர்​கள், பெற்​றோர்​கள், உள்ளாட்சி உறுப்​பினர்​கள், கல்வி அலுவலர்​கள், முன்​னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியை சார்ந்த அனைவருக்​கும் நுாற்​றாண்டு விழா குறித்து தெரியப்​படுத்த வேண்டும்.தற்போது பணிபுரி​யும் மற்றும் முன்​னாள் ஆசிரியர்களை கவுரவிக்க வேண்​டும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்​படுத்த திட்​டமிட வேண்​டும். இதற்காக, அரசின் வழிகாட்டு நெறி​முறைகள்படி கலந்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில், பள்ளி முதல்வர் ரேவதி, தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி தமிழ் பேராசிரியர் ராஜன், நாட்டு நலப்பணி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை