மேலும் செய்திகள்
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
09-Feb-2025
காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைதுகரூர்:கரூர் அருகே, காவலாளியை அடித்து கொன்ற, வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 71; இவர், ஈரோடு சாலை, சரவணா நகரில் உள்ள சிமென்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில், காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த, அசாம் மாநிலம் பீகுபார் பகுதியை சேர்ந்த கவுதம் என்பவரது மகன் சாகர் குமார், 20; என்பவருக்கும், நேற்று அதிகாலை தகராறு ஏற்பட்டது.அப்போது, குடிபோதையில் இருந்த சாகர் குமார், இரும்பு சுத்தியால் பழனியப்பனை அடித்து கொலை செய்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார், சாகர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
09-Feb-2025