அரசு கலைக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
அரசு கலைக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழாகரூர்:கரூர் அரசு கலைக்கல்லுாரியில், 23 வது பட்டமளிப்பு விழா முதல்வர் சுதா தலைமையில், கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.அதில், 2023-24ம் கல்வியாண்டில் படிப்பை நிறைவு செய்து, தேர்ச்சி பெற்ற, 1,273 மாணவ, மாணவியருக்கு சென்னை பி.எஸ். அப்துர் ரகுமான் கிரசன்ட் நிகர்நிலை பல்கலைகழக இணை துணை வேந்தர் தாஜூத்தீன், பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.அப்போது, கல்லுாரி தேர்வு கட்டுபாட்டாளர் கற்பகம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர்.