உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை

ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகிளிப்பட்டி, மகாதான-புரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில், விவாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்-தார்கள் அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார் கடந்த வாரத்தில் இருந்து சீரான விலையில் விற்கப்-படுகிறது. இதில் பூவன் தார், 250 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய், கற்பூரவள்ளி, 150 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை