உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கத்திரிக்காய் சாகுபடி பணியில் விவசாயிகள்

கத்திரிக்காய் சாகுபடி பணியில் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கத்திரிக்காய் சாகுபடி பணி-களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, வேப்பங்குடி, சிவாயம், பாப்பகாப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் பரவலாக காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கத்திரிக்காய் சாகுபடி அதிகமாக நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.விளைந்த காய்களை விவசாயிகள் பறித்து கரூர், திருச்சி, குளித்-தலை, முசிறி, தோகைமலை பகுதிகளில் செயல்படும், காய்கறி மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மொத்தமாக விற்பனை செய்யும்போது ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி