உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குகை வழிப்பாதையில் கூடுதல் மின் விளக்கு அமைக்க வலியுறுத்தல்

குகை வழிப்பாதையில் கூடுதல் மின் விளக்கு அமைக்க வலியுறுத்தல்

கரூர்: கரூர் உப்பிடமங்கலம் சாலையின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள குகை வழிப்பாதையில் கூடுதல் மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்ககல்பட்டி பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக உப்பிடமங்கலம், சேங்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இந்த சாலையின் நுழைவு வாயில் பகுதியில், கருர்- திண்டுக்கல் ரயில்வே பாதை செல்வதால், குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்த குகை வழிப்பாதையின் வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வப்போது சில பஸ்களும் குகை வழிப்பாதையின் வழியாக செல்கிறது. போதிய வெளிச்சம் இல்லாததால், இரவு நேரங்களில் குகை வழிப்பாதையை கடந்து செல்ல, அப்பகுதியினர் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, அப்பகுதியினர் நலன் கருதி குகை வழிப்பாதை இருபுறமும், கூடுதலாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி