நொய்யல் ஆற்றுப்பாலத்தில் கும்மிருட்டு இருளில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்
நொய்யல் ஆற்றுப்பாலத்தில் 'கும்மிருட்டு'இருளில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்அரவக்குறிச்சி, செப். 8-பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை மின்விளக்குகள் அமைக்காததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.கரூரிலிருந்து ,ஈரோடு செல்லும் சாலையில், நொய்யல் ஆற்றின் குறுக்கே முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் காலத்தில் பாலம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் தற்போது வரை இருந்து வருகிறது. இந்த பாலம் வழியாக கரூரிலிருந்து கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட, 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாள்தோறும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன.இந்த பாலம் அமைத்து பல ஆண்டுகள் ஆகியும் பாலத்தின் மேல் மின்விளக்குகள் இதுவரை அமைக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த குறுகிய பாலத்தில் தற்போது வாகன பெருக்கம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் நாள்தோறும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பாலம் குறுகிய அளவில் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.எனவே, பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.