உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தா.மலை வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

தா.மலை வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

தா.மலை வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்கரூர், செப். 17-தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு வரும், அக்., 4 ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. வரும் அக்., 10 ல் மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 12 ல் காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. வரும் செப்., 21 ல் முதலாவது சனி கிழமை வழிபாடு தொடங்குகிறது. அதையொட்டி, கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி, பக்தர்கள் வரிசையாக கோவிலுக்கு செல்லும் வகையில், மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை