| ADDED : ஜூன் 30, 2024 02:01 AM
கரூர், சீர்மரபினர் நல வாரிய உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலம் விபத்து, இயற்கை, ஈமச்சடங்கு உள்பட பல்வேறு உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கு சீர்மரபினர் இனத்தை சேர்ந்த, 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர், தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.