உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்-களால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பய-ணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.குளித்தலை பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, கரூர், கோவை, திருப்பூர், துறையூர், பெரம்பலுார், சென்னை, மணப்பாறை, திண்டுக்கல் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கும், முசிறி, பெட்ட-வாய்த்தலை, தோகைமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகு-திகளுக்கும், அரசு, தனியார் என, 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை நிறுத்துவதற்கென தனித்-தனி, 'ரேம்ப்' வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கண் கண்ட இடங்களில் பஸ்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதன் கார-ணமாக, குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியே செல்லும் பஸ்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கின்றன. மேலும், குளித்தலை மெயின் சாலை பகுதியில் பஸ்களை அணி-வகுத்து நிறுத்தி வைப்பதால், சாலை பகுதியிலும் கடும் போக்கு-வரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பஸ்-களை நிறுத்தும் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை