முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்: கணவர் கைது
கரூர்:கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி பத்தனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 34. இவருக்கு கடந்த, 2012ல் ஜோதி லட்சுமி, 28; என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு, மூன்று மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் முருகேசன், ஏற்கனவே திருமணமான, தேன்மொழி, 27; என்ற பெண்ணை கடந்த, 6 ல் திண்டுக்கல் மாவட்டம் பழனியில், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த முதல் மனைவி ஜோதிலட்சுமி, கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் முருகேசன், தேன் மொழி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.