உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வடக்கு காந்தி கிராமத்தில் குண்டும், குழியுமான சாலை

வடக்கு காந்தி கிராமத்தில் குண்டும், குழியுமான சாலை

கரூர்: கரூர் வடக்கு காந்திகிராமத்தில், பெரும்பாலான இடங்களில் சாலை வசதி இல்லாததால் மக்கள் தவித்து வருகின்றனர்.கரூர் மாநகராட்சி, வடக்கு காந்தி கிராமத்தில் இ.பி.காலனி, பெரியார் நகர் உட்பட, 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இங்குள்ள சாலைகள் வழியாக, பல்வேறு இடங்களுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பிரதான சாலைகளை தவிர மற்ற இடங்களில், இன்னும் சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை. தற்போது பிரதான சாலையும் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும், குறுக்கு தெருக்கள் மண் சாலையாக இருந்து வருகிறது. மழைக்காலத்தில், சேறும் சகதியுமாக மாறி விடுவதால், வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். தெருக்களில் கழிவுநீர் ஓடுவதால், பல்வேறு நோய்கள் பாதிக்கும் பகுதியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை