உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே ரயிலில் சென்றவருக்கு நெஞ்சு வலி

கரூர் அருகே ரயிலில் சென்றவருக்கு நெஞ்சு வலி

கரூர்: கரூர் அருகே, ரயிலில் சென்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.கோவையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், 55; இவர் நேற்று இரவு, மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சியில் இருந்து கோவைக்கு குடும்பத்துடன் புறப்பட்டார். மாயனுார்-கரூர் இடையே ரயில் சென்றபோது, ஆரோக்கியராஜூக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதுகுறித்து, ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாகனம், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டது. பிறகு, மயிலாடுதுறை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும், ஆரோக்கியராஜ் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ