அனைத்து பணியாளர் சங்க போராட்ட ஆயத்த கூட்டம்
கரூர், அக். 20-தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின், கரூர் மாவட்ட சங்க போராட்ட ஆயத்த கூட்டம், மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமையில், வட்டார அலுவலகத்தில் நடந்தது.அதில், நாளை முதல் (21) மாநில சங்கம் அறிவித்துள்ள, பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நடைபெற உள்ள தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில், கரூர் மாவட்டத்தில் செயல்படும், 514 நியாய விலை கடைகளில் பணியாற்றும், 475 பணியாளர்களும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், மாவட்ட தலைவர் கதிரவன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் செல்வரத்தினம் உள்பட, பலர் பங்கேற்றனர்.