உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழா

அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழா

அரவக்குறிச்சி: விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.விஜயலெட்சுமி அவர்கள் தலைமையேற்று ஆண்டு அறிக்கை வாசிக்க, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழாவினை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சின்னதாராபுரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் விஜயலெட்சுமி தலைமையேற்று ஆண்டறிக்கை வாசித்தார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.உதவி தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உமா கனகராஜ் சிறப்பாளராக கலந்து கொண்டார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காளிமுத்து, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரோஸ்லின் செலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி