உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவதி

சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவதி

சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவதிகரூர், செப். 26-கரூர் அரசு வேளாண்மை கல்லுாரி எதிரே, லட்சுமி தெற்கு வீதியில் சாலையின் குறுக்கே, சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. அப்போது, கான்கிரீட் அமைக்க போடப்பட்ட இரும்பு கம்பிகள், வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இணைப்பு சாலையில் போடப்பட்ட, தரமற்ற சிமெண்ட் ஜல்லிக்கற்கள், சமீபத்தில் பெய்த மழையால் சிதறி கிடக்கின்றன. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது, நீட்டிய நிலையில் உள்ள, இரும்பு கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் அரசு வேளாண்மை கல்லுாரி எதிரே, சாலையின் குறுக்கே உள்ள, சிறு பாலத்தில் சிதறி உள்ள சிமெண்ட் ஜல்லிக் கற்களை சீரமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை