உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

கரூர்: புகழூர் தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து, விழிப்புணர்வு முகாம், பண்டுதகாரன் புதுார் தனியார் மகளிர் கல்லுா-ரியில் நடந்தது.அதில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கும் முறை, தீக்காயம் ஏற்பட்டால் அளிக்கப்பட வேண்டிய முதலுதவி, எளிதில் தீ பிடிக்காத வகையில் உள்ள ஆடைகளை அணிதல் மேலும் பெற்றோர்களுடன் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவ-டிக்கைகள் குறித்து, தீயணைப்பு துறை வீரர்கள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, பொதுமக்க-ளுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.முகாமில், புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தனியார் கல்லுாரி மாண-விகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை