உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கரூர்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், அடுக்குமாடி குடி-யிருப்புக்கு சொந்த வீடற்ற ஏழைகள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., போன்ற நகர்ப்புற பகுதிகளில் வசித்து வரும் சொந்த வீடற்ற ஏழை குடியிருப்பு வாசிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு-களில் ஒதுக்கீடு பெற ”https://tnuhdb.tn.gov.in/webhome/dept_beneficiary_form.php” என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சுயமாகவோ, இ-.சேவை மையம் மூலமாகவோ, உரிய தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.வாரியத்தின் மூலம் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு பெற, ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாகவோ, சொந்த வீடோ, சொந்த நிலமோ இல்லாத நகர்ப்புற பகுதிகளில் வாடகை வீட்டில் வசிக்கும், அரசு நிர்ணயிக்கும் தொகையை தனது பங்களிப்பாக செலுத்த தயாராகவும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி