தென்கரை பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்கலாமே
குளித்தலைகுளித்தலை அடுத்த, தென்கரை பாசன வாய்க்காலில் நகராட்சி பகுதியான சுங்ககேட், கடம்பர்கோவில், சபாபதி நாடார் தெரு, பெரியபாலம், மலையப்பன் நகர், ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதுார் ஆகிய பகுதி மக்கள் பயன்படுத்தும் கழிவு நீர் வடிகால், குடியிருப்பு கழிவுநீர் ஆகியவை தென்கரை பாசன வாய்க்காலில் கலப்படமாகி வருகிறது.மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் பஞ்., பகுதியில் உள்ள பொது கழிவுநீர், கால்வாய்களில் கலப்பதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.