உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கனரக வாகனங்களால் நெரிசல்

கனரக வாகனங்களால் நெரிசல்

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரவக்குறிச்சி நகரப் பகுதியில் கனரக வாகன போக்குவரத்து அதிகமாக இருந்து வருகிறது. லாரி, பஸ்கள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும் நகருக்குள் வந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. காலை, மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்களும் வந்து செல்வதால் அதிகப்படியான நெரிசல் ஏற்படுகிறது. அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்லும் லாரிகள் அனைத்தும் புறவழிச் சாலையில் சென்று வர போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரவக்குறிச்சி பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை