மகள் மாயம்;தாய் புகார்
கரூர்கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கணேசன் என்பவரது மகள் புனிதா, 26; தனியார் பள்ளி ஆசிரியை. திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த, 26ல் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, புனிதாவின் தாய் சரஸ்வதி, 45, போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.