உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெரூரில் சாலையில் சிக்னல் பழுது சரி செய்ய ஓட்டுனர்கள் எதிர்பார்ப்பு

நெரூரில் சாலையில் சிக்னல் பழுது சரி செய்ய ஓட்டுனர்கள் எதிர்பார்ப்பு

கரூர், கரூர் - வாங்கல் சாலை, நெரூர் பிரிவு வழியாக மின்னாம்பள்ளி, நெரூர், ஒத்தக்கடை, மறவாப்பாளையம், அரங்கநாதன் பேட்டை, திருமுக்கூடலுார் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, விசேஷ நாட்களில் நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்துக்கு, ஏராளமான உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்போது, வாங்கல் சாலை நெரூர் பிரிவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதையடுத்து, நெரூர் பிரிவு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அங்கு, நெரூர் பிரிவில் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்லும் வகையில், ரவுண்டானா மற்றும் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் மட்டுமே சிக்னல் இயங்கியது. தற்போது சிக்னல் வேலை செய்யவில்லை. இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உடனடியாக சிக்னலை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை